Suzuki recently filed a patent for a leaning trike that the rider sits in rather than on, a sort of middle ground between a Polaris Slingshot and Piaggio MP3.
ரத்த சிவப்பு நிலா.. நாளை நிகழும் சந்திர கிரகணம்!! நாளை சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் நிழலில் முழு நிலவு மறந்து விலகும் நிகழ்வு தான் முழு சந்திர கிரகணம் எனப்படுகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சீரமைக்கும்போது சந்திர கிரகணம் நிகழும். இந்த சந்திர கிரகணத்தில் நிலவு செந்நிறத்தில் காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. முழு சந்திரனும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் விழுவது அம்ப்ரா என்று அழைக்கப்படுகிறது. அம்ப்ராவிற்குள் சந்திரன் இருக்கும்போது, அது சிவப்பு நிறத்தைப் பெற்று ரத்த-சிவப்பு தோற்றத்தை காணும் அரிய வாய்ப்பைத் தருகிறது. சந்திர கிரகணத்தின் போது, சந்திரனை அடையும் ஒரே சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்கிறது. பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்ட சிவப்பு நிறம் நிலவில் பட்டு ஒளிர்வதால் நிலவு சிவப்பாக தெரிகிறது. கிரகணத்தின் போது பூமியின் நிழலை நிலவில் பதிக்கும் நிலைகளை மூன்று கட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது: அம்ப்ரா-இது இருண்ட, மையப் பகுதியைக் குறிக்கும் பெனும்ப்ரா - எனப்படும் வெளிப்புற ...
கொரோனாவின் மூன்று அலைகள் ஓய்ந்திருக்கின்றன. இதனால் மக்கள் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றனர். இருப்பினும் முகக்கவசம் அணிவது அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது. இந்தச் சூழலில் இந்தியாவில் சராசரி கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 247ஐ விட அதிகமாகும். இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும்... விரிவாக படிக்க >>
ரூ. 5 கோடி பணத்தை தராமல் ஏமாத்திட்டாரு.. நடிகர் விமல் மீது பண மோசடி புகார் அளித்த தயாரிப்பாளர்! அரசு பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திரைத் துறையில் ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர் கோபி என்பவர், கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி நடிகர் விமல் தன்னை அணுகி மன்னர் வகையறா என்ற திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதில் தானே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் அதற்கு பணம் கொடுத்து உதவும்படி தன்னிடம் கூறினார். அந்த படத்திற்காக வாங்கிய தொகையை இத்தனை ஆண்டுகள் ஆகியும் தராமல் மோசடி செய்து வருகிறார் என புகார் அளித்துள்ளார். ஆரம்பத்தில் அவர் தயங்கவே படம் நல்ல கதையம்சம் கொண்டுள்ளதாகவும் மேலும் களவாணி 2 படத்தை அவர் பேனரில் தயாரிக்க உத்தரவாதம் அளித்ததன் பேரில் அவருக்கு வங்கி கணக்கிலும் தொகையாக ரூபாய் 5 கோடியும் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். 28-12-2014 அன்று அக்ரிமென்ட் போடப்பட்டது என்றும் மேலும் வாய்மொழியாக நெகட்டிவ் ரைட் கொடுப்பதற்காக நம்பிக்கை ஊட்டியதன் பேரில் அவருக்கு பணத்தை கொடுத்தேன் என தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். படம் வெளியான பிறகு நன்கு லாபத்தை ஈட்டிய நிலையில், தன்ன...
Comments
Post a Comment