ரத்த சிவப்பு நிலா.. நாளை நிகழும் சந்திர கிரகணம்!! நாளை சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் நிழலில் முழு நிலவு மறந்து விலகும் நிகழ்வு தான் முழு சந்திர கிரகணம் எனப்படுகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சீரமைக்கும்போது சந்திர கிரகணம் நிகழும். இந்த சந்திர கிரகணத்தில் நிலவு செந்நிறத்தில் காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. முழு சந்திரனும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் விழுவது அம்ப்ரா என்று அழைக்கப்படுகிறது. அம்ப்ராவிற்குள் சந்திரன் இருக்கும்போது, அது சிவப்பு நிறத்தைப் பெற்று ரத்த-சிவப்பு தோற்றத்தை காணும் அரிய வாய்ப்பைத் தருகிறது. சந்திர கிரகணத்தின் போது, சந்திரனை அடையும் ஒரே சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்கிறது. பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்ட சிவப்பு நிறம் நிலவில் பட்டு ஒளிர்வதால் நிலவு சிவப்பாக தெரிகிறது. கிரகணத்தின் போது பூமியின் நிழலை நிலவில் பதிக்கும் நிலைகளை மூன்று கட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது: அம்ப்ரா-இது இருண்ட, மையப் பகுதியைக் குறிக்கும் பெனும்ப்ரா - எனப்படும் வெளிப்புற ...
ரூ. 5 கோடி பணத்தை தராமல் ஏமாத்திட்டாரு.. நடிகர் விமல் மீது பண மோசடி புகார் அளித்த தயாரிப்பாளர்! அரசு பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திரைத் துறையில் ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர் கோபி என்பவர், கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி நடிகர் விமல் தன்னை அணுகி மன்னர் வகையறா என்ற திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதில் தானே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் அதற்கு பணம் கொடுத்து உதவும்படி தன்னிடம் கூறினார். அந்த படத்திற்காக வாங்கிய தொகையை இத்தனை ஆண்டுகள் ஆகியும் தராமல் மோசடி செய்து வருகிறார் என புகார் அளித்துள்ளார். ஆரம்பத்தில் அவர் தயங்கவே படம் நல்ல கதையம்சம் கொண்டுள்ளதாகவும் மேலும் களவாணி 2 படத்தை அவர் பேனரில் தயாரிக்க உத்தரவாதம் அளித்ததன் பேரில் அவருக்கு வங்கி கணக்கிலும் தொகையாக ரூபாய் 5 கோடியும் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். 28-12-2014 அன்று அக்ரிமென்ட் போடப்பட்டது என்றும் மேலும் வாய்மொழியாக நெகட்டிவ் ரைட் கொடுப்பதற்காக நம்பிக்கை ஊட்டியதன் பேரில் அவருக்கு பணத்தை கொடுத்தேன் என தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். படம் வெளியான பிறகு நன்கு லாபத்தை ஈட்டிய நிலையில், தன்ன...
ரஜினி, கமல் பட நடிகர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்! கமலின் 'சலங்கை ஒலி' 'சிப்பிக்குள் முத்து', 'சங்கராபரணம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.விஸ்வநாத், குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்து தனி முத்திரை படைத்தவர். பத்ம ஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி குவித்த அவர் இன்று காலமானார். அவரது மறைவிற்கு #RipLegend என்ற ஹேஷ்டேக் உடன் ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவிக்கின்றனர். தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தமிழ், இந்தி மொழிகளில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் கே.விஸ்வநாத். இவர் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து திரைப்படங்களை எடுத்து வெற்றி அடைந்தார். இவர் முதன்முதலாக 1965 ஆம் ஆண்டு அக்னேனி நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளியான ‘ஆத்ம கௌரவம்’ என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் பெரும் வெற்றி அடைந்ததால் தெலுங்கு துறையில் கவனிக்கத்தக்க இயக்குனராக வளர்ந்தார் கே.விஸ்வநாதன். ஏராளமான படங்களை இயக்கி சாதனைபடைத்துள்ளார். விஸ்வ...
Comments
Post a Comment